உள்ளூர் செய்திகள்
விஜய் மக்கள் இயக்கம் தொண்டரணி சார்பில நீர் மோர் பந்தல் திறப்பு
- பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
நடிகர் விஜய் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர்.புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின்படி திருப்பூர் வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டரணி சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.வடக்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் குத்புதின் தலைமை தாங்கி நீ மோர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சின்னதுரை,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ்,மாவட்ட நிர்வாகி பாஷா, சதாசிவம், காங்கேயம் நகர தலைவர் கிருஷ்ணசாமி,அங்கு ராஜ் மற்றும் கார்த்திக் மோகன், செல்வா நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.