உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை தனியார் பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்

Published On 2022-12-17 09:43 IST   |   Update On 2022-12-17 09:43:00 IST
  • அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பெரும்பாலான வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
  • 5 தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து 40 ஆயிரம் ரூபாய் அதிகாரம் விதித்தனர்.

உடுமலை : 

உடுமலை பகுதியில் ஒலி மாசு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பெரும்பாலான வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.இது குறித்து புகார்கள் வரவே மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்

இதில் 5 தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து 40 ஆயிரம் ரூபாய் அதிகாரம் விதித்தனர். சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News