உள்ளூர் செய்திகள்

சாலைகளில் வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்கை எரிய விட்டபடி செல்லும் காட்சி

திருப்பூரில் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

Published On 2022-11-23 06:42 GMT   |   Update On 2022-11-23 06:42 GMT
  • இரவு நேரத்தில் குளிர் மிக அதிகமாக இருப்பதால் வெப்பநிலை சரிந்து 68 டிகிரிக்கும் கீழ் பதிவாகிறது.
  • சாலைகளில் 30 அடி தூரத்துக்கு முன்பாக வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருக்கிறது.

திருப்பூர் : 

கடந்த வருடங்களை காட்டிலும் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பருவ மழையானது காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயலால் சராசரி அளவை காட்டிலும் சற்று கூடுதலாக மழை பொழிவு பதிவாகியுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக குளிரான கால நிலை நிலவி வருகிறது. பகலில் வெப்பநிலை உயர்ந்து காணப்படும் நிலையில், மாலை 6 மணி அளவில் மிகவும் குளிரான காலநிலை நிலவுகிறது. இதனால் இரவில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது சிரமமாக உள்ளது. மேலும் இரவு நேரத்தில் குளிர் மிக அதிகமாக இருப்பதால் வெப்பநிலை சரிந்து 68 டிகிரிக்கும் கீழ் பதிவாகிறது.

மாவட்டத்தில் பல்லடம் பொங்கலூர், காங்கேயம், குண்டடம், தாராபுரம், மூலனூர், அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு அதிக அளவில் உள்ளதால், குளிர் மிகவும் கடுமையாக உள்ளது. தொடர் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் பலருக்கும் சளி, தலைவலி உள்ளிட்ட உடல் நல கோளாறுகளும் ஏற்படுவதால் மருத்துவமனைகளில் சளி தொந்தரவால் நோயாளிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. குழந்தைகளும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர்.

அவினாசி பகுதியில் காலை 8 மணி வரை பனி மூட்டம் அதிக அளவில் சூழ்ந்து காணப்பட்டதால், சாலைகளில் வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர். மேலும் முக்கிய சாலைகளில் 30 அடி தூரத்துக்கு முன்பாக வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

Tags:    

Similar News