உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

குண்டம் திருவிழா - பெருமாநல்லூரில் குவியும் பக்தர்கள்

Published On 2023-04-03 09:52 GMT   |   Update On 2023-04-03 09:52 GMT
  • நாளை 4-ந்தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
  • பக்தர்கள் வசதிக்காக திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

பெருமாநல்லூர்:

பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் நாளை 4-ந்தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.இதையொட்டி நேற்று பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். நேற்று பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்களும் அங்கு கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு நீர்-மோர் வழங்க ஆங்காங்கே பல்வேறு இடங்களில் நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

Tags:    

Similar News