உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு நிலக்கடலை வா்த்தகம்

Published On 2023-07-04 09:36 GMT   |   Update On 2023-07-04 09:36 GMT
  • மறைமுக ஏலத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு நிலக்கடலை வா்த்தகம் நடைபெற்றது.
  • முதல் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,400 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது.

அவினாசி:

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு நிலக்கடலை வா்த்தகம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வரத்து குறைந்ததால் 215 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. குவிண்டாலுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,400 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6.64 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு மறைமுக ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காங்கயம் பகுதியைச் சோ்ந்த 2 விவசாயிகள் 44 மூட்டைகள் (2,238 கிலோ) தேங்காய்ப் பருப்புகளை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.56 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.

இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.70க்கும், குறைந்தபட்சமாக ரூ.50க்கும், சராசரியாக ரூ.60க்கும் ஏலம் போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.

Tags:    

Similar News