உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

முதலுதவி பெட்டி இல்லாமல் இயக்கப்படும் அரசு பஸ்கள் - கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு

Published On 2023-06-28 12:51 IST   |   Update On 2023-06-28 12:51:00 IST
  • காலாவதியான அரசு பஸ்களை உடனடியாக மாற்றி புதிய பஸ்களை இயக்க வேண்டும்.
  • எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படும் போது, பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

திருப்பூர்:

தற்போது பெரும்பாலான அரசு பஸ்கள் உருக்குலைந்து பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இயக்க தகுதியில்லாத பஸ்கள் இயக்கப்படுவதால், பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் அரசு பஸ்களில் முதலுதவிப்பெட்டியும் இல்லை. இதனால் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படும் போது, பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

பயணிகள் கூறுகையில், காலாவதியான அரசு பஸ்களை உடனடியாக மாற்றி புதிய பஸ்களை இயக்க வேண்டும். பெரும்பாலான பஸ்களில் முதலுதவி பெட்டி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதை கண்டு கொள்வதில்லை. அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்றனர்.

திருப்பூர் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, பழைய பஸ்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலுதவி பெட்டிகள் இல்லாத பஸ்களில் உடனடியாக பெட்டி அமைத்து மருந்து உள்ளிட்டவை வைத்து பராமரிக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News