உள்ளூர் செய்திகள்

கண்ணாடி கூண்டில் இருக்கும் தேரின் காட்சி.

உடுமலை மாரியம்மன் கோவில் தேருக்கு ரூ.7லட்சத்தில் கண்ணாடி கூண்டு

Published On 2023-08-19 05:34 GMT   |   Update On 2023-08-19 05:34 GMT
  • பழமை வாய்ந்த தேருக்கு பதிலாக இந்த ஆண்டு புதிதாக தேர் செய்யப்பட்டு விழாவும் நடத்தி முடிக்கப்பட்டது.
  • விழா காலங்களில் மட்டுமே பொது மக்களை தேரை பார்த்து தரிசனம் செய்ய இயலும்.

உடுமலை:

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கி வருகின்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். அதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேரில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் சூலத்தேவரை தரிசனம் செய்து மகிழ்வார்கள். பழமை வாய்ந்த தேருக்கு பதிலாக இந்த ஆண்டு புதிதாக தேர் செய்யப்பட்டு விழாவும் நடத்தி முடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிலையில் நிறுத்தப்பட்டுள்ள தேரை பாதுகாக்கும் பணி கோவில் நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் தேரை பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கண்ணாடியில் செய்யப்பட்ட கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக கொட்டகை அமைத்து தேர் மூடப்பட்டிருக்கும். இதனால் விழா காலங்களில் மட்டுமே பொது மக்களை தேரை பார்த்து தரிசனம் செய்ய இயலும்.

ஆனால் கோவில் நிர்வாகத்தின் புதிய முயற்சியால் நாள்தோறும் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் ஆண்டு முழுவதும் 3 புறங்களில் இருந்து தேரை பார்த்து தரிசனம் செய்யலாம் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News