உள்ளூர் செய்திகள்
காங்கயத்தில் சிறுமிக்கு திருமணம் - பெற்றோர் கைது
- சமூக நல அலுவலர் கள ஆய்வு செய்ததில் திருமணம் நடைபெற்றது உண்மையென தெரியவந்தது.
- காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், சமூக நல அலுவலர் கள ஆய்வு செய்ததில் திருமணம் நடைபெற்றது, உண்மையென தெரியவந்தது.
இந்த நிலையில் ஊர்நல அலுவலர் ஜோதியம்மாள் காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் காரைக்குடி பகுதியை சேர்ந்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை திருமணம் நடத்தி வைக்க உடந்தையாக இருந்த காரணத்தால் 2 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.