உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

குமரிக்கல்பாளையத்தில் தொல்லியல் எச்சங்கள் முழு ஆய்வு - அதிகாரிகள் தகவல்

Published On 2023-10-09 04:11 GMT   |   Update On 2023-10-09 04:11 GMT
  • குமரிக்கல்பாளையம் என்ற இடத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் எச்சங்கள், நடுகல் உள்ளிட்டவை இருக்கிறது.
  • 32 அடி உயர நடுகல், முதுமக்கள் தாழி, பல 100 ஆண்டுகளுக்கு முன் உள்ளவைகளை பார்வையிட்டனர்.

ஊத்துக்குளி,அக்.9-

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா, காவுத்தம்பாளையம் பஞ்சாயத்தில் உயர்மின் கோபுர திட்டத்தின் கீழ் துணை மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குமரிக்கல்பாளையம் என்ற இடத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் எச்சங்கள், நடுகல் உள்ளிட்டவை இருப்பதால் அவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும். துணை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மத்திய தொல்லியல் துறை திருச்சி கண்காணிப்பாளர் காளிமுத்து மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இங்குள்ள 32 அடி உயர நடுகல், முதுமக்கள் தாழி, பல 100 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்த இரும்பு ஆலைக்கழிவுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.

இது குறித்து களஞ்சியம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கூறுகையில், ஒரு வாரத்துக்குள் தொல்லியல் ஆய்வுக்குழுவினருடன் முகாமிட்டு, அங்குள்ள தொல்லியல் எச்சங்கள் குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். இங்குள்ள தொல்லியல் எச்சங்களை பார்க்கும் போது இது, கீழடி, ஆதிச்சநல்லுார் நாகரித்துக்கு முற்பட்டதாக கூட இருக்கலாம் எனவும் கணிக்கின்றனர்.

இந்த இடத்தை விரிவாக ஆய்வு நடத்தும் போது தமிழர்களின் பல மறைக்கப்பட்ட பாரம்பரியம், கலாசார தகவல்கள் வெளிவர வாய்ப்புண்டு என்றார்.

Tags:    

Similar News