உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அவிநாசியில் ஆய்வு

Published On 2023-09-11 09:40 IST   |   Update On 2023-09-11 09:40:00 IST
  • பூங்காவில் தயாரிக்கப்படும் மண்புழு உரம், இயற்கை உரம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்
  • கழிவுகளில் இருந்து மாற்று பொருட்கள் உற்பத்தி செய்யவும் அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

அவிநாசி

ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் மணிகண்டன் அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட 18 வாா்டுகளில் உள்ள வீடுகளிலிருந்து நாள்தோறும் சேகரமாகும் குப்பைகள் மூலம் கைகாட்டிபுதூா் வளம் மீட்பு பூங்காவில் தயாரிக்கப்படும் மண்புழு உரம், இயற்கை உரம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

இதைத்தொடா்ந்து செழிப்பு, பசுமை உரம் குறித்து விவசாயிகள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கழிவுகளில் இருந்து மாற்று பொருட்கள் உற்பத்தி செய்யவும் அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் (பொறுப்பு) இந்துமதி, சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி, தலைமை எழுத்தா் பாலசுப்பிரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News