உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

ஆடு, மாடுகளை கடித்து குதறும் நாய்களை பிடிக்க வேண்டும் - உடுமலை ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Published On 2023-06-24 06:44 GMT   |   Update On 2023-06-24 06:44 GMT
  • கூட்டத்தில் பல்வேறு செலவினங்கள் குறித்த 24 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.
  • வேட்டையாடி பழகிய நாய்கள் ஒன்றிணைந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுகிறது.

உடுமலை:

உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சண்முகவடிவேல், ஒன்றியக்குழு ஆணையர் சரவணகுமார், வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பல்வேறு செலவினங்கள் குறித்த 24 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.

கூட்டத்தில் பெரியகோட்டை, தாந்தோணி, சின்னவீரம்பட்டி கிராமங்களில் கால்நடைகள் வேட்டையாடுவதை தடுப்பதற்காக ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாய்கள் பிடிக்கப்பட வேண்டும் என்று கால்நடை துறையினர் தெரிவித்தனர்.

அதற்கு பிரதிநிதிகள் தரப்பில் வேட்டைக்கு செல்லும் நாய்களை வேட்டை முடிந்த பிறகு உரிமையாளர்கள் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். இதனால் வேட்டையாடி பழகிய நாய்கள் ஒன்றிணைந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுகிறது.அதை வனத்துறையினர் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News