உள்ளூர் செய்திகள்

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.

திருப்பூர் மாநகராட்சி 22 -வது வார்டில் தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

Published On 2023-05-09 10:25 GMT   |   Update On 2023-05-09 10:25 GMT
  • ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் தி.மு.க உறுப்பினராக சேர்ந்தனர்.
  • ன்னாள் மண்டல தலைவரும் வார்டு கவுன்சிலருமான ராதாகிருஷ்ணன் தலைமையில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

திருப்பூர்:

திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான க. செல்வராஜ் உத்தரவின் பேரில் திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டில் முன்னாள் மண்டல தலைவரும் வார்டு கவுன்சிலருமான ராதாகிருஷ்ணன் தலைமையில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் தி.மு.க உறுப்பினராக சேர்ந்தனர்.

இந்த முகாமில் வட்ட செயலாளர் ராஜ்குமார், வடக்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் திராவிட பாலு, வடக்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் அன்பு, அண்ணா காலனி பகுதி பிரதிநிதி குப்புசாமி, நிர்வாகிகள் ஆறுமுகம், ராஜவீதி மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News