உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி பயிற்சி

Published On 2022-08-20 10:54 GMT   |   Update On 2022-08-20 10:54 GMT
  • தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி சார்ந்த பயிற்சி.
  • விவசாயிகளுக்கு காரீப் முன்பருவ பயிற்சி வழங்கப்பட்டது.

உடுமலை :

உடுமலையை அடுத்த சின்னகுமாரபாளையம் பகுதியில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி சார்ந்த பயிற்சியாக விவசாயிகளுக்கு காரீப் முன்பருவ பயிற்சி வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட ஆலோசகர் அரசப்பன், உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி, விதைச்சான்றுத் துறை, வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு பேசினர்.

இந்த பயிற்சியின் போது குறுகிய வயதுடைய தானியம் மற்றும் தீவனம் என இரட்டைப் பயன்பாடு கொண்டதும் அதிக மகசூல் தரக்கூடியதுமான கோ (எஸ்) 32 ரக சோளத்தின் சிறப்பம்சங்கள் பற்றியும், விதை நேர்த்தி செய்தல், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், ஊட்டம் ஏற்றிய தொழு உரம் தயாரித்து அடியுரம் இடுதல் மற்றும் பூச்சி நோய் நிர்வாகம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

Tags:    

Similar News