உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அவினாசியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

Published On 2023-07-27 15:47 IST   |   Update On 2023-07-27 15:47:00 IST
  • அவினாசி புதிய பஸ் நிலையம் அருகே கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • ஆர்ப்பாட்டத்திற்கு பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஏ.எம். மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

அவினாசி:

மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அவினாசி புதிய பஸ் நிலையம் அருகே கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் வக்கீல் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஏ.எம். மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

இதில் வட்டாரத் தலைவர் சாமிநாதன், சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவர் த.சரவணன், முறியாண்டம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ரங்கசாமி., காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவு மாநில பொதுசெயலாளர் சாய்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News