உள்ளூர் செய்திகள்

யங் இண்டியா பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் தினவிழா கொண்டாடடப்பட்ட காட்சி.   

இச்சிப்பட்டி யங் இண்டியா பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா 

Published On 2022-12-25 08:18 GMT   |   Update On 2022-12-25 08:18 GMT
  • இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை போற்றும் விதமாக கிறிஸ்துமஸ் தினவிழா கொண்டாடடப்பட்டது.
  • கிறிஸ்துமஸ் பாடல், நாடகம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இச்சிப்பட்டியில் அமைந்துள்ள யங் இண்டியா பப்ளிக் பள்ளியில் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை போற்றும் விதமாக கிறிஸ்துமஸ் தினவிழா கொண்டாடடப்பட்டது. இதனையொட்டி பாரம்பரிய முறைப்படி கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் பாடல்,நாடகம்,உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு யங் இண்டியா பப்ளிக் பள்ளியின் செயலா் டாக்டர் டி.சிவசண்முகம், மற்றும் மனோன்மணி சிவசண்முகம் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளியின் முதல்வர் கே.அண்ணாமலை ,துணைமுதல்வர்கள் சசிகலா,நிஜிலாபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

Tags:    

Similar News