உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள். 

கல்லறை திருநாள் முன்னோர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் அஞ்சலி

Published On 2022-11-02 10:57 GMT   |   Update On 2022-11-02 10:57 GMT
  • இறந்தவர்களின் ஆத்துமா கர்த்தரிடத்தில் இளைப் பாறுகின்றது.
  • மரித்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் குடும்பத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி வழிபட்டனர்

திருப்பூர் :

சகல ஆத்துமாக்கள் தினத்தை கிறிஸ்தவர்கள் இன்று கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். இறந்தவர்களின் ஆத்துமா கர்த்தரிடத்தில் இளைப் பாறுகின்றது.அடிப்படை யில் அவர்களை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.மரித்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் குடும்பத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி வழிபட்டனர்.

திருப்பூரில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கு கிறிஸ்தவர்கள் காலையில் இருந்து குடும்பம் குடும்ப மாக வரத் தொடங்கினார் கள்.கார்களிலும், இரு சக்கர வாகனத்திலும் மாலை மற்றும் மலர்களை வாங்கி எடுத்து வந்தனர். இன்று மாலை 3 மணிக்கு பிறகு கூட்டம் அதிகரிக்கும். ஆயிரக்கணக்கான கிறிஸ்த வர்கள் கல்லறை களின் முன்பு சிறிது நேரம் மவுனமாக இருந்து ஜெபித்து சென்றனர். சிறு வர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக வந்தனர்.அனைத்து திருச்சபையை சேர்ந்த கிறிஸ்தவர்களும் தங்களது உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களை நினைவு கூர்ந்து ஜெபத் துடன் வழி பட்டனர்.ஒரு சில கல்லறை தோட்டங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.  

Tags:    

Similar News