உள்ளூர் செய்திகள்

காளிகுமாரசுவாமி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்ததை படத்தில் காணலாம்

பலவஞ்சிப்பாளையம் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி பூஜை

Published On 2023-03-22 10:28 GMT   |   Update On 2023-03-22 10:28 GMT
  • 16 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
  • சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வீரபாண்டி :

திருப்பூர் அருகே வீரபாண்டி பலவஞ்சிபாளையம் காளிகுமாரசுவாமி கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் சத்ரு சம்ஹார திரிசதி பூஜை மற்றும் அமாவாசை பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 4 மணிக்கு 16 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின்பு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News