அவினாசியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு
- அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ராஜேந்திரன் (58) என்பவரை அவினாசி போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவினாசி:
அவினாசி போலீசார் அவினாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டறை பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக பழனிச்சாமி மகன் ரமேஷ் (வயது 34), ஆனந்த் மகன் தினேஷ் (27) மற்றும் சீனிவாசன் (58) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து பணம் ரூ. 450 ,சூதாட்டத்துக்கு பயன்படுத்திய சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவினாசியை அடுத்து ஆட்டையாம்பாளையத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (58) என்பவரை அவினாசி போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் புகையிலை பொருட்கள் இருந்தன. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து 5 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர்.