உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் கார்கள், சரக்கு வேன் மோதல்
- சரக்கு வேன் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
- பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை முன்னே சென்று கொண்டிருந்த கார் ஓன்று திடீரென பிரேக் போட்டதால், அதன் பின்னே வந்த மற்றொரு கார், மற்றும் சரக்கு வேன் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.