உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-02-09 07:12 GMT   |   Update On 2023-02-09 07:12 GMT
  • வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கேத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டியபாளையத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் தினேஷ் (வயது 22 ). கார்டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தினேஷ் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News