உள்ளூர் செய்திகள்

தாய்ப்பால் வார விழா பேரணியில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம். 

வெள்ளகோவிலில் தாய்ப்பால் வார விழா பேரணி

Published On 2022-08-06 04:57 GMT   |   Update On 2022-08-06 04:57 GMT
  • விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உணவு வகைகள், இரும்பு சத்துள்ள உணவு, சத்தான காய்கறிகள் போன்றவைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
  • பேரணியில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய மேற்கு நடுநிலைப்பள்ளியில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது, அதை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது, இந்த விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உணவு வகைகள், இரும்பு சத்துள்ள உணவு வகைகள். சத்தான காய்கறிகள் போன்றவைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

இந்த பேரணியில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் முத்துராம லட்சுமி, மேற்பார்வையாளர் லட்சுமி , உதவியாளர் யோக பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News