உள்ளூர் செய்திகள்

பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிய காட்சி.

பா.ஜ.க.வின் திட்டம் தமிழகத்தில் பலிக்காது - நாஞ்சில் சம்பத் பேச்சு

Published On 2022-09-20 07:27 GMT   |   Update On 2022-09-20 07:27 GMT
  • பெரியாரின்,அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
  • டெல்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்கு சில ஆட்டுக்குட்டிகள் கத்துகின்றன.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், பெரியார், அண்ணா, ஆகியோரது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரியார் சுப்பிரமணி தலைமை வகித்தார். அங்ககுமார், குமாரவேல், முன்னிலை வகித்தனர். திருமூர்த்தி வரவேற்றார். இதில் கலந்துகொண்டு நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

பெரியாரின்,அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.டெல்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்குச் சில ஆட்டுக்குட்டிகள் கத்துகின்றன.பயந்து நடுங்கும் கட்சியல்ல தி.மு.க. இந்த நாட்டில் நன்றாக உள்ள கட்சியை உடைத்து,அதில் உள்ள குள்ள நரிகளை வைத்து ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.க.வின் நரித்தனம் தமிழகத்தில் பலிக்காது.இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில அமைப்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மற்றும் மு.சுப்பிரமணியம், காவி.பழனிச்சாமி, சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News