சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பா.ஜ.க.வினர் மறியல்
- பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் சாலைகள் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம்.
- சாலைகள் குண்டும்குழியுமாக உள்ளதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.
திருப்பூர்:
திருப்பூா் அங்கேரிபாளையத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.மறியலுக்கு பாஜக., மண்டலத் தலைவா் ராம்குமாா் தலைமை வகித்தாா்.
மறியலில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:-
திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 15 வது வாா்டில் ஒரு தனியாா் நிறுவனம் மட்டுமே உள்ள பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரா்கள் ஈடுபட்டிருந்தனா். இது குறித்த தகவலின்பேரில் அங்கு சென்று பயன்பாட்டில் உள்ள பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.ஸ்ரீநகா் பிரதான சாலை, மஹாவிஷ்ணு நகா், ஏவிபி லே- அவுட் பள்ளி வீதி ஆகிய இடங்களில் சாலைகள் குண்டும்குழியுமாக உள்ளதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.
ஆகவே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் சாலைகள் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், ஒப்பந்ததாரா்கள் தனியாா் நிறுவனம் உள்ள இடத்தில் சாலை அமைக்கும் பணியைத் தொடா்ந்ததால் வேறுவழியின்றி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அனுப்பா்பாளையம் காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.இதில் மாநகராட்சி நிா்வாகத்திடம் மனு அளிக்க அறிவுறுத்தியதன்பேரில் மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.