உள்ளூர் செய்திகள்

செல்வராஜ் எம்.எல்.ஏ., பணிகளை தொடங்கி வைத்த காட்சி.

பல்லடம் அருகே ரூ.47.39 லட்சம் மதிப்பில் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை -செல்வராஜ் எம்.எல்.ஏ.,தொடங்கி வைத்தார்

Published On 2023-06-14 07:45 GMT   |   Update On 2023-06-14 07:45 GMT
  • 15 வது நிதி குழு மானிய நிதியிலிருந்து கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.
  • அல்லாளபுரம் பகுதியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார்.

பல்லடம் :

பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சியில் சக்தி நகர், ஜோதி நகர் ,லட்சுமி நகர், கங்கா நகர் அமரஜோதி கார்டன் உள்ளிட்ட இடங்களில் 15 வது நிதி குழு மானிய நிதியிலிருந்து ரூ.47.39 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார். பல்லடம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் ஒன்றியக் குழு தலைவர் குமார், பல்லடம் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சிகளில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக அவர் அல்லாளபுரம் பகுதியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில்,பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், வேலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜ், பூமலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செந்தில், கணபதிபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் முருகன், கதிஜா, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கதிரேசன், ரவி தண்டபாணி, கோவிந்தம்மாள், செல்வராஜ்,ஜெயலட்சுமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் , பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News