கருகம்பாளையம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு குறும்படம் திரையீடு
- நாளை நமதே என்னும்பெ யரில் விழிப்புணர்வு குறும்படம் மாணவ, மாணவிகளுக்கு திரையிடப்பட்டது.
- விடாமுயற்சியுடன் கல்வி கற்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி கருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் பெண்கல்வியின் முக்கியத்துவத்தையும், இடைநிற்றலைத் தவிர்த்து தடைகளை கடந்து விடாமுயற்சியுடன் கல்வி கற்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் "நாளை நமதே" என்னும்பெ யரில் விழிப்புணர்வு குறும்படம் மாணவ, மாணவிகளுக்கு திரையிடப்பட்டது.
இதில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்னசுகந்தி, உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள், சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் பெரியசாமி, துளசிமணி ஆறுமுகம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், ஒன்றிய பிரதிநிதி எழிழரசன், எழில்நிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.