உள்ளூர் செய்திகள்
- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவியர் கலந்து கொண்ட பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, சினேகா சமூக சேவை மையம் ஆகியவை இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவியர் கலந்து கொண்ட பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பல்லடம் அரசு கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில், பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்கள் சக்தி தேவி, சுதாகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், மற்றும் சினேகா மையத்தைச் சேர்ந்த ரோஸ்லின் மேரி மற்றும் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.