உள்ளூர் செய்திகள்

 குழந்தைகளுக்கான தடகளப் போட்டி நடைபெற்ற காட்சி.

உடுமலை அரசு கல்லூரியில் குழந்தைகளுக்கான தடகளப் போட்டி

Published On 2022-08-29 12:13 GMT   |   Update On 2022-08-29 12:13 GMT
  • போட்டியில் சுமார் 500 குழந்தைகள் கலந்து கொண்டனர்.
  • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது.

உடுமலை :

உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் குழந்தைகளுக்கான தடகள போட்டி நடந்தது.போட்டிகளுக்கு கல்லூரி முதல்வர் கல்யாணி, திருப்பூர் தடகள சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் பங்கேற்றார். இந்த போட்டியில் 27 பள்ளிகள் மற்றும் கிளப்களில் இருந்து சுமார் 500 குழந்தைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு உடுமலை ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை அரசு கலைக் கல்லூரி உடற்கல்வித்துறை, லயன்ஸ் கிளப் ,தேஜஸ் ரோட்டரி இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News