உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Published On 2022-12-19 08:19 GMT   |   Update On 2022-12-19 08:19 GMT
  • 1997-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை படித்த மாணவ - மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
  • 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் :

பெருமாநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1997-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை படித்த மாணவ - மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தங்களுக்கு பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களையும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் பீரோ, மின்விசிறி மற்றும் பல பொருள்களை பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் வழங்கினர். 18 ஆண்டுகளுக்கு முன் 5½ ஏக்கர் நிலத்தை பெருமாநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பால சமுத்திரத்தில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கிய நன்கொடையாளர் ரத்தினசாமி நினைவுகூர்ந்து அவரது மகன் முரளிகுமரேசனை கவுரவப்படுத்தினர்.

இந்த சந்திப்பில் 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News