உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

திருப்பூர் பின்னலாடை அமைப்பினருடன் ஏ.ஐ.டி.யு.சி. தேசிய நிர்வாகிகள் சந்திப்பு

Published On 2023-09-25 14:29 IST   |   Update On 2023-09-25 14:29:00 IST
  • ஏ.ஐ.டி.யு.சி. சங்க தேசிய நிர்வாகிகள் சந்திப்பு கலந்தாய்வு கூட்டம் திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது.
  • கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா, டீமா, நிட்மா, டெக்பா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருப்பூர்

ஏ.ஐ.டி.யு.சி. தேசிய பொதுக்குழு கூட்டம் திருப்பூரில் கடந்த 21-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. திருப்பூர் சுப்பராயன் எம்.பி. அழைப்பின் பேரில் திருப்பூர் தொழில் அமைப்பினர், ஏ.ஐ.டி.யு.சி. சங்க தேசிய நிர்வாகிகள் சந்திப்பு கலந்தாய்வு கூட்டம் திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை தலைவர் சுப்பராயன் எம்.பி. வரவேற்றார். அகில இந்திய பொதுச்செயலாளர் அமிர்ஜித் கவுர், செயல் தலைவர் பினாய் விஸ்வம் எம்.பி., தேசிய செயலாளர் சுகுமார் பாம்ளே, திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் பின்னலாடை தொழில்துறையின் தற்போதைய தொழில்பாதிப்பு நிலை, தொழில்துறை சந்திக்கும் இடர்பாடுகள், பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். இந்த கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா, டீமா, நிட்மா, டெக்பா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். தொழில்துறையினரின் கோரிக்கைகளை பெற்ற ஏ.ஐ.டி.யு.சி. தேசிய நிர்வாகிகள்,

இதுதொடர்பாக தேசிய பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News