உள்ளூர் செய்திகள்
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
அவினாசியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
- 2000 வாக்குகள் அதிகம் பெற அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
- கூட்டத்தில் தேர்தல் பணி மேற்பார்வை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். கோவை புறநகர் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நாசர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணி மேற்பார்வை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
2000 வாக்குகள் அதிகம் பெற அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இலக்கிய அணி மாவட்ட செயலார் கார்த்திக் ராஜா, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.