உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஆதிதிராவிடா்- பழங்குடியின விவசாயிகள் துரித மின் இணைப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-03-14 07:47 GMT   |   Update On 2023-03-14 07:47 GMT
  • 1,000 எண்ணிக்கையில் மின் இணைப்பு வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

திருப்பூர் :

திருப்பூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியின விவசாயிகள் துரித மின் இணைப்புக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- தமிழக சட்டப்பேரவை யில் 2022-23 ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின்போது தாட்கோ திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடா், பழங்குடி யின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இத்திட்டத்தில் குதிரை மோட்டார் மின் திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் 900 ஆதிதிராவிடா், 100 பழங்குடியினா் என மொத்தம் 1,000 எண்ணிக்கையில் மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆதிதிராவிடா், பழங்குடியின வகுப்பை சோ்ந்த விவசாயிகள், விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவா்களது பெயரில் இருப்பவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com இணையதளத்தில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட தற்கான நிலத்தின் வரைபடம், சா்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்தற்கான ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை அணுகி விவரங்களைப் பெற்று உரிய ஆவணங்க ளுடன் விண்ணப்பதைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News