உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

Published On 2022-07-10 05:15 GMT   |   Update On 2022-07-10 05:15 GMT
  • தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது என பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் மனு.
  • கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த மனுவில், எங்களது பகுதியில் சமூக விரோதிகள் சிலர் கையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர்.அவர்கள் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. மேலும் தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது .எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறோம் .

இதன்படி போலீசார் விசாரணையில் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த்(வயது 35) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News