சூறாவளியில் இருந்து வாழை மரங்கள் சேதமாவதை தடுக்கும் காற்றுத்தடுப்பான்
- கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயிகள் அதிகம் வாழை பயிரிடுகின்றனர்.
- அரசு பயிர்க்காப்பீடு திட்டத்தில் காப்பீடு இருந்தும், எதிர்பார்க்கும் நேரத்தில் இழப்பீடு கிடைப்பதில்லை.
குடிமங்கலம் :
வாழை மரங்கள் சூறா வளிக்கு சேதமாவதை தடுக்க இலவசமாக காற்று த்தடுப்பான் சவுக்கு வளர்க்கலாம் என வனத்து க்குள் திருப்பூர் திட்டக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்ட ங்களில் விவசாயி கள் அதிகம் வாழை பயிரிடு கின்றனர். வாழைக்கு அரசு பயிர்க்காப்பீடு திட்டத்தில் காப்பீடு இருந்தும், எதிர்பா ர்க்கும் நேரத்தில் இழப்பீடு கிடைப்பதில்லை. வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை நிவார ணமும், விவசாயிகளுக்கு விரைவாக கிடைப்பதில்லை. வாழை த்தார் அறுவடை செய்யும் நேரத்தில் அடி யோடு வாழை மரம் முறிந்து விழுவதால் ஓராண்டு உழைப்பு வீணாகி விடுகிறது. வாழை விவசாயிகளின் கவலையை போக்கும் வகையில் மத்திய அரசின் வன மரபியல் ஆராய்ச்சி மற்றும் மரப்பெருக்கு நிறு வனம், காற்றுத்தடு ப்பான் சவுக்கு மரக்கன்றை உரு வாக்கியது. மரம் வளர்ப்பில் ஈடுபடும் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு இலவ சமாக காற்றுத்தடுப்பான் மரக்கன்றுகளை நட்டு கொடுக்கிறது.இது குறித்து வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் கூறுகையில்,
வாழை மரங்கள் சூறா வளிக்கு முறிந்து சேதமாவது வருத்தம் அளிக்கிறது. விவ சாயிகள் பாதிக்கப்படு வதை தவிர்க்க உயிர்வேலி யாக காற்றுத்தடுப்பான் சவுக்கு மரம் வளர்க்கலாம். விவசாயிகளுக்கு இலவச மாக நாற்றுகளை வேலியாக நட்டு கொடுக்கி றோம். வேளாண் பயிர்களை பாது காக்க சவுக்குவேலி அமைக்க லாம். மேலும் விவரங்களுக்கு 9047086666 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.