உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பெருமாநல்லூா் அருகே விபத்தில் கிராம நிா்வாக அலுவலா் பலி

Published On 2023-09-08 16:16 IST   |   Update On 2023-09-08 16:16:00 IST
  • பெருமாநல்லூா் பாரதி நகா் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
  • தாமோதரனின் (37) இருசக்கர வாகனத்தின் மீது சேதுராமன் இருசக்கர வாகனம் மோதியது.

பெருமாநல்லூர்:

அவிநாசியை அடுத்த பெருமாநல்லூா் எஸ்.எஸ்.நகரைச் சோ்ந்தவா் சேதுராமன் (வயது 43). இவா், ஊத்துக்குளி ஒன்றியம், காவுத்தம்பாளையம் ஊராட்சியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், இவா் பெருமாநல்லூா் பாரதி நகா் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த பெருமாநல்லூா் லட்சுமி காா்டன் பகுதியை சோ்ந்த திருமூா்த்தி மகன் தாமோதரனின் (37) இருசக்கர வாகனத்தின் மீது சேதுராமன் இருசக்கர வாகனம் மோதியது.

இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சேதுராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாநல்லூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Tags:    

Similar News