உள்ளூர் செய்திகள்
வீட்டிற்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு
- 4 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு வந்துள்ளது.
- வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் உப்புபாளையம் ரோடு, சக்தி நகரில் விஜயகுமார் என்பவரது வீட்டின் காம்பவுண்டுக்குள் சுமார் 4 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு வந்துள்ளது.இதைக்கண்ட விஜயகுமார் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுச்சாமி தலைமையில், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.