உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

வெள்ளகோவிலில் 60 டன் முருங்கை காய் வரத்து

Published On 2023-09-04 07:08 GMT   |   Update On 2023-09-04 07:08 GMT
  • ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது
  • 105 விவசாயிகள் 60 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்

வெள்ளகோவில் : 

வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள். அந்த வகையில் நேற்று 105 விவசாயிகள் 60 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 6 க்கும், மரம் முருங்கை ரூ.5 க்கும், கரும்பு முருங்கை ரூ. 8 முதல் ரூ.10 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

Tags:    

Similar News