வெள்ளகோவில் 30 டன் முருங்கைகாய் வரத்து
- 90 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- முருங்கை ரூ.30 முதல் ரூ.55 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி மாதத்தில் ஞாயிறு தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ள கோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். நேற்று 90 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.40க்கும், மரமுருங்கை ரூ.30முதல் 35வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.50 முதல் 55 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
வியாபாரிகள் முருங்கைகாய்களை சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள மார்கெட் மற்றும் ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.