உள்ளூர் செய்திகள்

குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கி இருந்த குறுமிளகு.

1 ½ வயது குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கிய குறுமிளகு - அரசு டாக்டர்கள் நவீன சிகிச்சை மூலம் அகற்றினர்

Published On 2023-02-18 17:52 IST   |   Update On 2023-02-18 17:52:00 IST
  • ஒன்றரை வயது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
  • குழந்தைக்கு சி.டி., ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் அடுத்த சின்னக் கரையை சேர்ந்த ஒருவரின் ஒன்றரை வயது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் /அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை துறையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சி.டி., ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் குழந்தையின் மூச்சுக்குழாயில் குறுமிளகு சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து டாக்டர்கள் குழுவினர் பிரான்ஸ்கோபி மூலம் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த குறுமிளகு அகற்றப்பட்டது. மேற்கொண்ட சிகிச்சைக்கு பின் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது.

Tags:    

Similar News