உள்ளூர் செய்திகள்
- போலீசார் வாகன சோதனையில் சிக்கினார்
- வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டிஎஸ்பி தனிப்படை குற்ற பிரிவு போலீசார் நேற்று இரவு ஆம்பூர் பைபாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக பைக்கில் வந்த வாணியம்பாடி டவுன் வி.எஸ்.கே. நகர் சேர்ந்த மாதவன் வயது (20) என்வரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது ஆம்பூர் சுற்று புற பகுதியில் கடந்த சில நாட்களாக மாதவன் 7 பைக்குகளை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.