உள்ளூர் செய்திகள்

2 பேரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

Published On 2022-08-08 09:38 GMT   |   Update On 2022-08-08 09:38 GMT
  • வேகமாக பைக்கை ஓட்டி வந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்
  • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் வாணியம்பாடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு இவரது மகன் விஜயபாபு (வயது 27) இவர் நேதாஜி ரோடு கட்டேரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது சக்கரகுப்பம் பகுதியைச் சேர்ந்த காந்தி ராஜான் என்பவர் தனது பைக்கில் வேகமாக ஓட்டி வந்தார்.

இதைபார்த்த விஜயபாபு ஏன் இவ்வளவு வேகமாக பைக்கை ஓட்டி வருகிறாய் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காந்திராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது விஜயபாவுக்கு ஆதரவாக நண்பர் இளையராஜா ஏன் இவ்வளவு வேகமா ஓட்டி வந்தாய் எனக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காந்தி ராஜன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 2 பேரையும் குத்தினார். இதில் விஜயபாபு தலைமீதும் இளையராஜா கைமீதும் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த விஜயபாபு இளையராஜா ஆகியோர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விஜயபாபு கொடுத்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அரசு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காந்திராஜனை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News