உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர் கைது

Published On 2023-05-25 08:14 GMT   |   Update On 2023-05-25 08:14 GMT
  • போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்
  • திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பு

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை ஆத்துமேடு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மது போதையில் பொதுமக்களை அவதூறாக பேசியும் சாலையில் செல்லும் வாகனங்களை வழி மறித்தும் இடையூறு செய்து கொண்டிருந்தார்.

பின்னர் இது குறித்து பொதுமக்கள் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு செய்த அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 37) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News