உள்ளூர் செய்திகள்

வீட்டில் தூக்கிட்டு தொழிலாளி சாவு

Published On 2023-01-22 14:55 IST   |   Update On 2023-01-22 14:55:00 IST
  • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் கோபி (வயது 22), கட்டிட தொழிலாளி.

இவர், கடந்த 16-ந்தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் வீட்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு

சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச் சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் சேர்க் கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த நாட்றம்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News