உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற பெண் கைது

Published On 2023-05-23 08:15 GMT   |   Update On 2023-05-23 08:15 GMT
  • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
  • கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அருகே கள்ள சாராயம் விற்பனை செய்த பெண்ணை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

புதுப்பேட்டை அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

சத்யா (வயது 60) என்பவர் தன் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

பின்னர் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News