உள்ளூர் செய்திகள்
ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
- படிக்கட்டில் பயணம் செய்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
குடியாத்தம் வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஓடும் ரெயிலில் தவறி விழுந்த பெண் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.