உள்ளூர் செய்திகள்

ரெயில்வே உயர தடுப்பு கம்பியில் சிக்கி கொண்ட லாரியை படத்தில் காணலாம்.

ரெயில்வே தடுப்பு கம்பியில் சிக்கிய லாரி

Published On 2022-06-15 15:19 IST   |   Update On 2022-06-15 15:19:00 IST
  • டிரைவர் தவிப்பு
  • 1 மணி நேரம் போராடி மீட்கப்பட்டது.

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பந்தரபள்ளி பகுதியில் ரெயில்வே துறை சார்பில் உயர தடுப்பு அளவு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே துறை சார்பில் அளவுக்கு அதிகமாக ‌ லோடு ஏற்றி வரும் ‌ லாரி மற்றும் உயரத்தை தடுக்கும் வண்ணமாக ஐகேஜ் எனப்படும் உயர தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுப்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளி வந்த லாரி டிரைவர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார்.

அப்போது பந்தரபள்ளி பகுதியில் அமைந்துள்ள உயர தடுப்பு அளவு கம்பியில் லாரி சிக்கிக்கொண்டது அதன்பின்னர் செய்வதறியாமல் திகைத்த டிரை வர்அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் போராடி லாரியை எடுத்துச் சென்றார்.

இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News