உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்திய காட்சி.

லாரிகள் மோதி டிரைவர் பலி

Published On 2023-02-07 15:13 IST   |   Update On 2023-02-07 15:13:00 IST
  • ஆற்காட்டை சேர்ந்தவர்
  • போக்குவரத்து பாதிப்பு

ஆம்பூர்:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சென்ன சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42). லாரி டிரைவர்.

இவர் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து லாரியில் கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்னை குமுடிபூண்டி பகுதிக்கு செல்வதற்காக ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்று கொண்டி ருந்தார்.

அப்போது நொண்டி குப்பம் அருகே வரும்போது சேலம் அடுத்த மேட்டூர் பகுதியில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றி க்கொண்டு சென்னை செல்வதற்காக முன்னால் சென்று கொண்டு இருந்த லாரி மீது சிவகுமார் ஓட்டி வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு ள்ளானது.

இதில் சிவகுமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிவகுமாரின் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கிரானைட் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News