பெண்ணிடம் செயின், செல்போன் பறிக்க முயற்சி
- 2 வாலிபர்கள் கைது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப் - இன்ஸ் பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம் பள்ளி பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப் போது நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும் படியாகச் சுற்றித்திரிந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் , முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியதால், போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் . இருவரும் , வாணியம்பாடி அருகில் உள்ள ஜாப்ராபாத் பகுதியைச் சேர்ந்த இம்ரான் மகன் முகமது பைசான் (வயது 22), முஸ்லிம்பூர் பகுதியைச் சேர்ந்த சையத்ரகுமான் மகன் நிஜாஸ் சாஹிப் ( 19 ) எனத் தெரிய வந்தது.
கடந்த 26 - ந்தேதி கொத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்பழக னின் மனைவி பவித்ரா தன்னுடைய தந்தையான ராமமூர்த் தியோடு மோட்டார்சைக்கிளில் வெலக்கல்நத்தம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பர்கூரை நோக்கி சென்று கொண் டிருந்தார் . அப்போது அந்த வழியாக வந்த முகமது பைசானும், நிஜாஸ்சாஹிப்பும் மோட்டார்சைக்கிளில் சென்று பவித்ரா வின் செல்போன், கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றதாகக் கூறினர்.
இதையடுத்து முகமது பைசான், நிஜாஸ்சாஹிப் ஆகி யோரை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.