உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு சிறு தானியங்கள் சாகுபடி குறித்து பயிற்சி முகாம்

Published On 2023-11-04 07:54 GMT   |   Update On 2023-11-04 07:54 GMT





வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் நடவடிக்கை

ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குப்பட்ட நாய்க்கனூர் ஊராட்சியில் உள்ள கிராம பகுதிகளில் வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகருக்கு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் மேலா திருப்பதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி, மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தேசிய உணவு திட்டத்தின் ஆலோசகர் வாசுதேவரெட்டி. ஆலங்காயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புவிதவள்ளி, வேளாண்மை அலுவவர் சோபனா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் துணைத் தலைவர் தமிழ்செல்வி ஜோதிலிங்கம் ஆகியோர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News