உள்ளூர் செய்திகள்

ெரயில்வே கேட்டில் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-04-18 14:56 IST   |   Update On 2023-04-18 14:56:00 IST
  • ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ஆம்பூர்: 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் (மின்னூர்) ெரயில்வே கேட்டின் வழியாக கல் குவாரி லாரிகள் 24 மணி நேரமும் செல்கிறது.

இந்த ெரயில் பாதை ஓரு மணிநேரத்தில் 3 ெரயில்கள் செல்கின்றன. இதனால் ெரயில்வே கேட் தினசரி அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு முறை திறந்து மூடும் போது காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் கேட் திறந்தும் வரிசையில் 20 லாரிகள் போட்டி போட்டு கேட் வழியாக சென்று வரும் போதும் ஓரு சில நேரங்களில் ெரயில் பாதை தண்டவாளத்தில் லாரி சிக்கிய போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

நேற்று இரவு இது போன்று ஒரு சம்பவம் நடந்தது லாரிகள் மீது ெரயில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News