உள்ளூர் செய்திகள்
- ரூ.5 ஆயிரம் அபேஸ்
- கதவை உடைத்து துணிகரம்
திருப்பத்தூர்:
கந்திலியை அடுத்த காக்கங்கரை ஆரம்ப சுகாதார நிலையத் தில் நர்சாக பணிபுரிபவர் சங்கீதா (வயது 31). இவர் அருகே உள்ள நர்ஸ் குடியிருப்பில் தங்கி வருகிறார்.
நேற்று வழக்கம்போல பணி முடிந்து வீட்டுக்கு சென்று மீண்டும் தனியாகபடுத்துக்கொள்ள பயந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் வந்து தூங்கினார்.
அப்போது குடியிருப்பு வீட் டில் முன்பக்க கதவை உடைத்து அவரது அலமாரியில் வைத் திருந்த ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.